பெரிய ஆவுடையார் கோவில் | Periya Avudayar Kovil

Periya avudayar kovil in palani | Periya avudayar Temple in palani | palani city | History of palani | p2pdistrict.in |

பெரு உடையார் கோவில்: (கோதைமங்கலம், பழனி)

     பெரு உடையார் (பெரிய ஆவுடையார் கோவில் என அழைக்கப்படுகிறது) என்பது மிக முக்கியமானதும், தனியாக குறிப்பிடத் தகுந்ததுமான கோவிலாகும். இது பெரிய அவுடையார் அல்லது பிரகதீஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டது . அவரே பிரபஞ்சத்தின் இறைவன். இங்கு உள்ள மூர்த்தி “சுயம்புலிங்கம்” என அழைக்கப்படுகிறது, அதாவது இயற்கையாக உருவான லிங்கம். இது போகர் முனிவரின் காலத்திற்கு முன்னரே இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த கோவிலின் சிறப்பம்சங்களில் தக்ஷிணாமூர்த்தி, ருத்ரன் மற்றும் பிற தெய்வங்கள், மேலும் 16 பழமையான கல்வெட்டுகள் அடங்கும். இதைவிட மேலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோவிலருகே பழனி தேவஸ்தானம் ஒரு கல்யாண மண்டபமும் கட்டியுள்ளது.

     இக் கோவில் பழனி அருகிலுள்ள சண்முக நதிக்கரையில், இயற்கை அழகுடன் அமைந்த இடத்தில், ரெயில்வண்டி பாதைக்கு அருகில் அமைந்துள்ளது. பழனி பஸ் நிலையத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதை இரண்டு கட்டமாகச் சென்றடைந்து விடலாம். பழைய தாராபுரம் சாலையில் செல்லும் பஸ்சுகளில் மூன்று கிலோமீட்டர் பயணித்து, அந்த சாலையில் இருக்கும் வாசல் வளைவில் இருந்து ஒரு கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு கோவிலை அடையலாம்.

Leave a Reply